குறில், நெடில், ஆய்தம், ஒற்று, அளபெடை, குறுக்கம் என ஆறு வகைகளில் எழுத்துக் குறித்துத் தெரிந்து கொள்ளுதல் போதுமானது.
குறில் என்பது குறுகி ஒலிக்கும் எழுத்தாகும். இதற்குரிய மாத்திரை (ஒலிக்கும் கால அளவு) 1 ஆகும். அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் உயிர்க்குறில்களாகும். க, கி, கு, கெ, கொ என்பன முதலாகிய தொண்ணூறும் (5x18=90) உயிர்மெய்க் குறில்களாகும்.
நெடில் என்பது 2 மாத்திரையுடைய எழுத்தாகும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் உயிர் நெடில்களாகும். கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ என்பன முதலாகிய நூற்றிருபத்தாறும் (7x18=126) உயிர் மெய் நெடில்களாகும்.
No comments:
Post a Comment